மாநிலத்தில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி விடாத நபர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை மாநகர போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ்:
அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நோயாளிகளை மாற்றுவதற்கும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சாலையில் பயணிக்கும் போது மற்ற வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதமாக சைரன் அலாரம் ஒலிக்கப்படுகிறது. ஆனால் வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஹரியானா மாநில போக்குவரத்து ஆணையர் புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை (பிப்.22) மின்தடை – அலர்டா இருங்க மக்களே! ஏரியா லிஸ்ட் இதோ!
அதன்படி ஹரியானா மாநிலம் குருகுராமில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழி விட மறுத்தால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் மூலமாக வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விதி மீறுபவர்களுக்கு ரசீது அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Whatsapp Channel – Join Now