ரோஜா சீரியலில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பம் – அடுத்து நடக்கப்போவது என்ன?
சன் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் பல திருப்பங்களை சந்தித்து உள்ளது. இதனாலேயே இது TRP ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு திருப்பம் நிகழ்ந்து உள்ளது.
ரோஜா சீரியல், அர்ஜுன் மற்றும் ரோஜாவுக்கு இடையான காதல், அவர்களை பிரிக்க நினைக்கும் அனு, பாட்டி இவர்கள் ஒரு பக்கம். செண்பகத்தின் உண்மையான மகள் யார் என்பதை கண்டுபிடிக்க போராடும் அர்ஜுன் மற்றும் ரோஜா அவர்கள் மற்றொரு பக்கம் என கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பல முறை உண்மையான அனுவின் முகம் தெரிய வரும் தருணத்தில் பல திருப்பங்கள் மூலம் அது வெளிப்படாமலேயே இருந்துவிட்டது. இப்படி பல விறுவிறுப்புடன் பல காட்சிகளை ஒளிபரப்பாகி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கையே கொண்டு வந்துவிடுகிறது ரோஜா சீரியல்.
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.8 க்கும் குறைவான தினசரி ரீசார்ஜ் திட்டங்கள்!
இந்நிலையில் தற்போது வெளியான இந்த சீரியல் ப்ரோமோவில், அனுவின் கையில் இருந்து எதையோ வாங்க நினைத்து அவளுடன் சண்டை போடுகிறார் அர்ஜுன். அதன் பிறகு அர்ஜுனை தள்ளிவிட்டு ஓடும் அனுவை பின்தொடர்கிறாள் ரோஜா. இருவரும் மொட்டை மடியில் சந்தித்து மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலின் போது அனு துரதிஷ்டவசமாக கீழே விழுந்து விடுகிறார். அவரை காப்பாற்ற போராடியும் ரோஜாவால் முடியாமல் போகிறது.
புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
இதை அறிந்த அவர்களின் குடும்பம் மற்றும் டைகர் மாணிக்கம் அனுவை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கிறார்கள். அதன் பிறகு அனுவின் இந்த நிலைமைக்கு ரோஜா தான் காரணம் எனக் கூறி போலீஸ் அவரை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதை பார்த்த அர்ஜுன் மற்றும் அவரின் குடும்பம் மிகுந்த வேதனையில் அழுது கொண்டு இருக்கின்றனர். இப்படி அந்த ப்ரோமோ ஒளிபரப்பாகி உள்ளது. இதன் பிறகு ரோஜா மற்றும் அனு கதாபாத்திரங்களுக்கு என நிகழும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
தயவு செய்து ரோஜா நாடகத்தை நிறுத்த சொல்லுங்க பாக்குறவங்க என்ன கேனயன்களா அனு ஆதாரத்தோடு அதுவும் ஒரு உயர்அதிகாரியிடமே மாட்டுவாளாம் ஆனா இந்த கிழவி சொன்னதும் விட்டுறுவாங்களாம் இப்படி பல காட்சிகள் இதுல நீங்க வேற ப்ரோமோ மயிருனூ