சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரவுள்ள அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ரோஜா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“ரோஜா” சீரியல்
சன் டிவியில் தற்போது பல வித ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “ரோஜா”. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் தற்போது தனது தங்கையான அனுவிடம் மாடியில் நின்று பேசும் போது, அவரை கவனமாக இருக்க சொல்கிறார். ஆனால், அணு மாடியில் இருந்து விழுந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் ரோஜா மாடியில் இருந்து எட்டி பார்க்கும் போது, கீழே இருப்பவர்கள் ரோஜா தான் அனுவை தள்ளி விட்டார் என்று நினைத்து விடுகின்றனர். இதனால் ரோஜாவின் மீது அபாண்டமாக பழி விழுந்து விடுகிறது.
Instagram பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரீல்ஸ் காலநேரம் அதிகரிப்பு!
இதனால் ரோஜாவை கைது செய்து விடுகின்றனர். இதனால் சோகம் அடையும் அர்ஜுன் அவரை காப்பாற்றுவதற்காக கோர்ட்டில் வாதாடுகிறார். நேற்று ஒளிபரப்பான எபிசோடில் அனுவை ஒரு உருவம் துரத்தி சென்றதாக அர்ஜுனிடம் ரோஜா கூறுகிறார். பின்னர், அர்ஜுன் இதனை பற்றி யோசிப்பதாக கூறுகிறார். இப்படியாக இருக்க, தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில், அர்ஜுன் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் அனுவை பார்க்க செல்கின்றனர். அங்கு அனு அமைதியாக அமர்ந்து இருக்கிறார். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டாரோ? என்று அர்ஜுன் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் சந்தேகம் அடைகின்றனர். அதனை பரிசோதனை செய்ய இன்ஸ்பெக்டரை துப்பாக்கி எடுத்து அர்ஜுன் சுட சொல்கிறார். இப்படி பல்வேறு ட்விஸ்டுடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.