சன் டிவி ‘ரோஜா’ சீரியல் ப்ரோமோ – அனுவை கைது செய்யும் போலீசார், உண்மையை அறிந்த குடும்பத்தினர்!

0
சன் டிவி 'ரோஜா' சீரியல் ப்ரோமோ - அனுவை கைது செய்யும் போலீசார், உண்மையை அறிந்த குடும்பத்தினர்!
சன் டிவி 'ரோஜா' சீரியல் ப்ரோமோ - அனுவை கைது செய்யும் போலீசார், உண்மையை அறிந்த குடும்பத்தினர்!
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் ப்ரோமோ – அனுவை கைது செய்யும் போலீசார், உண்மையை அறிந்த குடும்பத்தினர்!

சன் டிவி ரோஜா சீரியலில், அனைவரும் எதிர்பார்த்தது போல அனு கோமாவில் இல்லை என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது. இதனால் இன்றைய எபிசோட் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஜா சீரியல்:

சின்னத்திரை சீரியல்களில் டாப் இடத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்றான ரோஜாவில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் நடைபெறும் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. கோமாவில் இருப்பதாக எல்லோரையும் ஏமாற்றி கொண்டிருக்கும் அனுவை சிக்க வைக்க குடும்பத்துடன் இணைத்து அர்ஜுனும், ரோஜாவும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்திற்கும் அசையாமல் அனு இருக்கிறார்.

தமிழகத்தில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

முதலில் ரோஜா மிளகாய் போட்டு சாம்பிராணி போடுகிறார். ஆனால் அதற்கும் அசையாமல் இருக்கிறார் அனு. பின்னர் மாமியாரின் யோசனை படி சூப்பில் மிளகாய் பொடி கலந்து கொடுக்கிறார். ஆனால் அதற்கும் அனு அசையவில்லை. இந்நிலையில் அனுவை குணப்படுத்த பாட்டி காளி பூஜைக்கு ஏற்பாடு செய்கின்றனர். அதில் அனு பற்றிய உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். பாட்டியின் பூஜையை தடுப்பதற்காக அர்ஜுன், ரோஜா, கல்பனா ஆகியோர் பல விஷயங்களை செய்கின்றனர். தக்காளி மற்றும் முட்டைகளை கொண்டு எறிகின்றனர். அது அவர்கள் மீது படுகிறது . அதனால் அவர் மந்திரம் சொல்ல முடியாமல் திணறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

அர்ஜுன் தரப்பினர் தொடர்ந்து தாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் அடுத்த திட்டத்திற்கு நகர்கிறார் அர்ஜுன். அதன் பிறகு ஒரு பெரிய பண்டலாக பட்டாசை சுற்றி அனு அருகில் உருட்டி விடுகிறார் அர்ஜுன். அதை பார்த்து அனைவருக்கும் ஷாக். பெரிய வெடிகுண்டு வெடிக்க போகிறது என நினைக்கின்றனர். பட்டாசு வெடிக்க தொடங்கியதும் அனு வீல்சேரில் இருந்து எழுந்து சென்று திவ்யா அருகில் நின்று கொள்கிறார். அதை பார்த்த பாட்டி அதிர்ச்சி அடைகிறார். அதற்கு பிறகு போலீஸ் வருகிறது. அனு குணமடைந்து விட்டால் அவளை கைது செய்யுங்கள் என கூறுகின்றனர். மேலும் அந்த மந்திரவாதி பெண்ணையும் கைது செய்ய சொல்கிறார் அர்ஜுன். அவர் அர்ஜுன் வீட்டுக்கு முதலில் வந்த போதே தனக்கு தகவல் வந்தது என போலீஸ் சந்திரகாந்தா கூறி, அவரை கைது செய்ய சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!