குக் வித் கோமாளி டூ பாக்கியலட்சுமி – திறமையின் மூலம் வறுமையை வென்ற ரித்திகா!
தற்போது பாக்கியலட்சுமி தொடரில் அம்ரிதாவாக நடித்து வரும் நடிகை ரித்திகாவின் வாழ்க்கையில் நடிப்பு எவ்வாறு வந்தது என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம்.
குக் வித் கோமாளி ரித்திகா:
நடிப்பதை கவனவாகவும், வாழ்கையாகவும் சிறு வயது மூலம் நினைப்பவர்கள் நடிப்பில் ஜொலிப்பது ஆச்சர்யமில்லை, எதிர்பாராத விதமாக நடிக்க வந்த நடிகை நடிப்பில் மற்றவர்களை விட தெரிவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நடிகை ரித்திகாவாக அனைவருக்கும் தெரியும் அவரின் நிஜ பெயர் தமிழ்செல்வி. பிறந்தது, படித்தது, வளர்த்தது எல்லாம் கோவையில் தான். இவருக்கு நடிக்கும் ஆசை இருந்தது இல்லையாம். 12ம் வகுப்பு வரை படித்த பிறகு, குடும்ப கஷ்டத்தை உணர்ந்திருக்கிறார். இதனால் கஷ்டப்பட்டு கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ஏதேனும் ஒரு துறையில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பதை தனது லட்சியமாக வைத்துள்ளார்.
விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவி முக்கிய சீரியலின் நடிகை மாற்றம் – ரசிகர்கள் ஏற்றுக் கொள்வரா?
கல்லூரி முடித்த பிறகு நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக வேலை கிடைத்துள்ளது. வேறு வழியில்லாமல் அந்த வேலையை செய்துள்ளார். இதன் மூலம் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார். இதனால் லோக்கல் சேனல் ஒன்றில் விஜே வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்னர், மும்பையில் வேலை கிடைக்க அங்கு 2 வருடங்கள் உள்ளார். ஆனால் இவர் கல்லூரி காலங்களில் பல இடங்களில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கேட்டு கொடுத்துள்ள புகை படங்களை பார்த்து சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படங்கள்!
பயத்துடனே தனது சீரியல் நடிப்பை தொடங்கியுள்ளார். இவர் முதன்முதலில் ராஜா ராணி சீரியலில் வினோதினி கதாபாத்திரத்தில் நடித்தார்.தனது துறுதுறு நடிப்பால் விரைவிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்து விட்டார். அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில்,பாலாவுடன் அவரை சேர்த்து அதிகம் கலாய்த்து விட்டார்கள். பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் அம்ரிதாவாக தற்போது எழில் க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த ஜோடிக்கு ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இது தவிர காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பாலாவுடன் கலந்து கொள்கிறார். இவர் தனது திறமையின் மூலம் தனது குடும்ப வறுமையை போக்கி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.