தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அடுத்தடுத்து லீக்கான வினாத்தாள்கள்!
தமிழகத்தில் தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் நடந்து வருகிறது. ஆனால் தற்போது தேர்வின் வினாத்தாள்கள் முன்னதாக வெளியானதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரசு தேர்வுகள் துறை தற்போது இதற்கான விசாரணையை நடத்தி வருகிறது.
திருப்புதல் தேர்வுகள்:
வழக்கமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளுக்கு முன்னதாக 3 முறை திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு விடும். இதனால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பற்றிய அச்சம் நீங்கி அவர்கள் தேர்வுக்கு எளிதாக, எந்த வித பயமும் இல்லாமல் தயாராவார்கள். தற்போது நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், அந்த சமயத்தில் முதல் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் 2ம் திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது.
தமிழகத்தில் ஊரடங்கு அமல், கொரோனா கட்டுப்பாடுகள் மீறல் – போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருப்புதல் தேர்வுகள் தொடங்குவதற்கு சற்று முன்னரே கேள்வித்தாள்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அப்படி அனுப்பிவைக்கப்பட்ட கேள்வித்தாள்கள், தேர்வுக்கு முன்கூட்டியே பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது. பிற்பகலில் தான் தேர்வுகள் நடக்க இருந்த நிலையில், சென்னையில் உள்ள 8 பள்ளிகளுக்கு மட்டும் காலையிலேயே வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு வினாத்தாள் கசிந்துள்ளது. ஆனால் எந்த பள்ளியில் இருந்து அவை லீக் ஆனது என்ற விவரம் தெரியவில்லை.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு, புதிய ஓய்வூதிய விதி – முழு விபரங்கள் இதோ!
இதனை தொடர்ந்து நாளை முதல் வினாத்தாள் காலையில் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ள அரசு தேர்வுகள் துறை இது தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறது. இதேபோல், முன்னதாக அறிவியல் மற்றும் கணிதம் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான நிலையில், இன்றைய வணிகவியல் வினாத்தாள் வெளியாகியுள்ளது. இருப்பினும், அனைவர்க்கும் இன்று திட்டமிட்டபடி பிற்பகலில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.