தமிழகத்தில் ஊரடங்கு அமல், கொரோனா கட்டுப்பாடுகள் மீறல் – போலீசார் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்தில் அரசின் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய 45 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வாகனங்கள் பறிமுதல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் இருந்து வந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரம் எடுக்க தொடங்கியது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இரவு நேர மற்றும் ஞாயிற்று ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதித்தார். மேலும் திரையரங்கு, உணவகம் போன்ற இடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு, புதிய ஓய்வூதிய விதி – முழு விபரங்கள் இதோ!
அலுவலகங்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற காரணங்களுக்கு வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விதிகளை மீறுவோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி இந்த ஒரு வார காலத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத 2,502 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9,66,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி உள்ளுர் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!
சமூக இடைவெளி கடைபிடிக்காத 13 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.6,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை பெருநகரில் உள்ள 11 காவல் மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் வாகனத் தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு விதிகளை மீறுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.