மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பு – அமைச்சரவை முடிவு!
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் அமராவதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓய்வு பெறும் வயது உயர்வு
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. அத்துடன் பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா பரவல் மேலும் பரவாமல் இருக்க முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் அமராவதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதில் குறிப்பாக கொரோனா தொற்றின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவது, 3வது டோஸான பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது விரைவுபடுத்துவது அத்துடன் இரவு நேர ஊரடங்கு நேரத்தை நீட்டிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பி.வெங்கட் ராமய்யா செய்தியாளரிடம் கூறியுள்ளார். இவர் கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கு புதிய பிஆர்சியின் படி ஊதியம் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் அடுத்த வாரம் முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அமைச்சர் தகவல்!
மேலும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இதனை 62 வயதாக உயர்த்த உள்ளதாக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு பணியிடத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் குறையும். இதற்கு முன்னதாக கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது