மாநிலம் முழுவதும் அடுத்த வாரம் முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அமைச்சர் தகவல்!
கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் அடுத்த வரம் முதல் திறக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு மத்தியில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி இயக்கம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வந்தது. இப்போது கர்நாடகா மாநிலத்தின் கொரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதாவது மாநில அரசு மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டது.
ஹேக் செய்யப்பட்ட க்ருனால் பாண்டியாவின் ட்விட்டர் அக்கவுண்ட் – ரசிகர்கள் குழப்பம்! நடந்தது என்ன?
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் அடுத்த வாரத்தில் இருந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தகவல் அளித்துள்ளார். இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் கூறும் போது, ‘கர்நாடகாவில் அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் துவங்கப்படலாம். என்றாலும் பள்ளிகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கை குறித்து ஜனவரி 29ம் தேதியன்று நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!
இப்போது, பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 3 நாட்கள் மட்டுமே வகுப்புகளை நடத்துவது மற்றும் மாணவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பள்ளிகளை அடைப்பது குறித்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கர்நாடகாவில் மார்ச் 28 முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கும் நிலையில், இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளை மீண்டுமாக திறக்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படலாம் என தெரிகிறது.