பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் உ.பி மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் பிப்ரவரி 15 வரை விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது.
பிப்ரவரி 15 வரை விடுமுறை:
கொரோனா மூன்றாம் அலையின் துவக்கமாக கொரோனா தினசரி பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் போடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் உள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அடுத்த வாரம் முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அமைச்சர் தகவல்!
அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் மாணவர்களின் நலன் அடிப்படையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 30 வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா தாக்கம் மேலும் அதிகரித்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விடுமுறை உத்தரவு நிறைவு பெற உள்ள நிலையில் மீண்டும் அனைத்து கல்வி நிறுவனங்களும் பிப்ரவரி 15 வரை மூடப்படும் என அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் அவ்னிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார்
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!
மேலும் 10 முதல் 12 ம வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,937 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தொற்று பாதித்த 80,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். லக்னோவில் மட்டும் புதன்கிழமை 2,096 பேருக்குத் தொற்று பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.