தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? வெளியான தகவல்!
தமிழகத்தின் கடந்த 10 ஆண்டுகால வெள்ளை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதன் மூலம் மோசமான நிலையில் நிதி பற்றாக்குறை உள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு மீண்டும் குறைக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஓய்வு வயது குறைப்பு?
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கான வெள்ளை அறிக்கை நேற்று (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமான நிலையில் தான் உள்ளது என்பது கடந்த ஆட்சியின் போதே தெரிய வந்தாலும் இவ்வளவு மோசமாக இருப்பதை வெள்ளை அறிக்கை மூலமாக வெளிப்படையாக தெரிந்துள்ளது. ஆனால் தமிழக அரசின் நிதிநிலை பற்றி முக்கியமாக பீதி அடைந்துள்ளது மக்கள் தான்.
TVS நிறுவன பைக்குகளின் விலை ரூ.700 முதல் ரூ.5,000 வரை உயர்வு – முழு விவரம் இதோ!
இந்த மோசமான நிலையை சரி செய்ய அரசு மக்களிடம் மின்சாரம், போக்குவரத்து கட்டணத்தை அதிகமாக வசூலிக்க உள்ளதா என குழப்பத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் எப்படி ஒட்டுமொத்த விலைவாசியும் உயர்கிறதோ, அதேபோல் மின்சாரம், போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்தாலும் உடனடியாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்து விடும்.
அதுமட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெற்றதும் வழங்கப்பட வேண்டிய தொகை கொடுக்க முடியாமல் இருந்ததால் தான் கடந்த ஆட்சியில் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 60 ஆகவும் அரசு உயர்த்தியது. ஒருவேளை அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஓய்வு பெறும் வயதை 65 ஆக கூட உயர்த்தி இருக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை கூடுதலாக இரு ஆண்டுகள் வேலை இருக்கிறது என்பது ஆறுதலான விஷயம். அதே சமயம் திமுக அரசு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
TN Job “FB Group” Join Now
கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கு டிஏ நிறுத்தப்பட்டது. லீவ் சரண்டர் ரத்து செய்யப்பட்டது. அதே போல் விடுப்பு பயணச் சலுகையும் நிறுத்தப்பட்டது. இவ்வாறு பல்வேறு பலன்களை அரசு ஊழியர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் அரசு மீண்டும் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க உள்ளதாகவும், செட்டில்மெண்ட் தொகையை இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்றுக்கொள்ளும் வகையில் பத்திரம் வழங்கப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனை கேட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.