தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது குறைப்பு? வெளியான தகவல்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு - ஓய்வு பெறும் வயது குறைப்பு? வெளியான தகவல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு - ஓய்வு பெறும் வயது குறைப்பு? வெளியான தகவல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது குறைப்பு? வெளியான தகவல்!

தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வயதை குறைப்பதற்கு முதல்வர் முக ஸ்டாலின் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓய்வு வயது

தமிழக அரசுத்துறைகளில் ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் உட்பட சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. இப்படி இருக்க கடந்த ஆண்டு உருவான கொரோனா பெருந்தொற்று, தமிழக அரசுக்கு பல்வேறு நிதி தொடர்பான பாதிப்புகளை உருவாக்கியது.

தமிழகத்தில் டிச.14, 15ம் தேதிகளில் உள்ளுர் விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

இதனை சரி செய்யும் விதத்தில் அப்போது முதல்வர் பதவியில் இருந்த அதிமுக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணை இந்த ஆண்டு மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அரசாணை தற்போது நடைமுறையில் இருக்கும் நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளத்தில் வந்திருக்கும் பல்வேறு மனுக்களின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க திட்டமிட்ட அரசு இதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

மேலும் இந்த ஓய்வு வயது குறைப்பு முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனுடன் இந்த உத்தரவுக்கு அனுமதி கிடைத்தால், வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உடனடியாக ஓய்வு பெறும் பட்சத்தில் ஓய்வூதிய பணப்பலன்கள் குறித்த கேள்விகளும் ஊழியர்களிடம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!