தமிழகத்தில் டிச.14, 15ம் தேதிகளில் உள்ளுர் விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஏதேனும் சிறப்பு நிகழ்வுகளில் போது அந்த மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உள்ளுர் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் முறையே 2 மாவட்டங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள் உள்ளது. இந்த திருத்தலங்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். அதனால் அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பார். அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தமிழ் மாதமான மார்கழியில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த நிகழ்வு வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படும். இந்த வைகுண்ட ஏகாதசி நடைபெறும் பத்து திருநாள்களிலும் உற்சவரான பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – அரசு வழங்கிய பாடக்குறிப்பு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
இதனை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவர். வழக்கம் போல நடப்பு ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ரங்கநாதர் கோயிலில் காலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு 14.12.2021 அன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு டிசம்பர் 18ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கடந்த 5ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் டிசம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இஸ்லாமியர்களும், பொது மக்களும் வந்து கலந்து கொள்வர். இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 2022 ஜனவரி மாதம் 8ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.