சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு மாத மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் தேவசம் போர்டு தற்போது கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.
கூடுதல் தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அத்துடன் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் – மத்திய அரசு அறிவுறுத்தல்! பயனர்கள் அதிர்ச்சி!
மேலும் பருவ மழைக்காலம் என்பதால் சபரிமலைக்கு அருகே உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையின் அளவு குறைந்துள்ளதால் கடந்த மாதம் 16 ஆம் தேதி இரண்டு மாத கால மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டது. தற்போது ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகிறார்கள். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் புனித யாத்திரைக்கு இணையவழி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அடுத்த 2 நாட்களுக்கு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள், 144 தடை அமல் – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அத்துடன் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் தேவசம் போர்டு தற்போது கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியிலுள்ள வனப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இதேபோல் சபரிமலை சன்னிதானத்தில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அத்துடன் பம்பை ஆற்றில் குளிப்பதற்கும், தர்ப்பணம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.