தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் – மத்திய அரசு அறிவுறுத்தல்! பயனர்கள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் - மத்திய அரசு அறிவுறுத்தல்! பயனர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் - மத்திய அரசு அறிவுறுத்தல்! பயனர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் – மத்திய அரசு அறிவுறுத்தல்! பயனர்கள் அதிர்ச்சி!

தமிழக மின் வாரியம் கடனில் இருந்து மீளுவதற்கு மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின் வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மின் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மின் கட்டணம்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின் துறையில் பல மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மாதம் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என்று அறிவித்தனர். ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மின் பயனர்களால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு மின் வாரியம் மின் பயனர்களுக்கு கட்டணம் செலுத்த சலுகைகளை அரசு அளித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – புத்தாண்டில் DA, HRA உயர்வு? முழு விவரம் இதோ!

மேலும் மின் கட்டணத்தை கால தாமதமாக செலுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்படவில்லை. இதனால் நடப்பு ஆண்டு மின் வாரியம் வருவாய் இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழக மின் வாரியம் கடனில் இருந்து மீள மின் கட்டணத்தை உயத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து மக்கள் மீள முடியாமல் இருகின்றனர். இந்த நேரத்தில் பெட்ரோல் விலை, காய்கறிகள் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது.

அடுத்த 2 நாட்களுக்கு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள், 144 தடை அமல் – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இந்த நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தி மேலும் மக்களை அவதிக்குள்ளாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின் வாரியத்தின் கடனை மக்கள் சுமப்பது எப்படி நியாயமாகும். மின் கட்டணத்தை உயர்த்த கூறிய அறிவுறுத்தலை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். மின்சாரமும், நிலக்கரியும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதில் நடைபெறும் முறைகேடுகளை களைய வேண்டும். அப்போது தான் கடனில் இருந்து மின்துறை மீள முடியும் என்று மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!