தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஓய்வு வயது – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ள நிலையில், அதனை 58 ஆக பழைய முறையில் மாற்ற வேண்டும் என்று அரசு போக்குவரத்து ஹெச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கத்தினர் அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள்:
தமிழ்கத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வயது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 59 ஆக உயர்த்தப்பட்டு முன்னதாக பணியில் இருந்தவர்களே தொடர்ந்தனர். தொடர்ந்து ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. மத்திய அரசும் தனது பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு, ஓய்வு பெறும் வயது – முதல்வருக்கு கோரிக்கை!
தற்போது தமிழக அரசிடம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல சங்கத்தினர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர். அரசு பணியாளர்களுக்கான ஓய்வு பெறும் வயது 60 ஆக தமிழக அரசாலும் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு போக்குவரத்து ஹெச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதாவது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பு சரியாக இருக்காது. போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
பொதுவாக இதனால் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சோர்வு ஏற்பட்டு விடுகிறது. இதனால் பலர் விருப்ப ஓய்வு பெற்று செல்கின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக இருந்தால் விபத்துகள் ஏற்படும் சூழல் உண்டாகும். இதனால் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக இல்லாமல் 58 வயது போதும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.