நாளை (பிப்.4) மீண்டும் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
புதுச்சேரியில் நாளை (பிப்.4) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதை பின்பற்றி தினசரி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
நாடு முழுவதும் பரவிய கொரோனா மூன்றாம் அலை காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் மாணவர்களை தொற்று பாதிப்பில் இருந்து காக்கும் பொருட்டு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 3ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனை மூலமாகவும், பள்ளிகளிலும் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 28 நாட்களுக்கு பிறகு இரண்டாம் டோஸ் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சமூக நலத்துறை வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மாநில அரசுகள் ஊரடங்குகளை ரத்து செய்தது. மேலும் பள்ளிகளை திறக்கவும் அனுமதி அளித்தது. மாநிலங்களை தொடர்ந்து யூனியன் பிரதேசமான புதுவையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைப்பு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்
- பள்ளி வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை வெப்பநிலைமானி கொண்டு அளவீடு செய்து சரியாக இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்;
- ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். மேலும் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் கொரோனா தடுப்பூசி 1 டோஸ் செலுத்தியிருக்க வேண்டும்.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்