தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானங்கள் – முதல்வர் அறிவிப்பு!!
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கைகள் மீதான கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் முக ஸ்டாலின் நிறைவேற்றினார். நீட் தேர்வு குறித்த சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நீட் தேர்வு:
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கைகள் மீதான கூட்டத்தொடரின் இறுதிநாள் இன்று. அதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் நேற்றைய தினமே அறிவித்திருந்தார். அதையொட்டி, இன்று கூட்டத்தொடரில் நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரிடையே விவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது கூட நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என தெரிவித்தார்.
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி? ரசிகர்கள் ஷாக்!
பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக தமிழகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க கோரி கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 14 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துள்ளனர். இன்று தமிழக இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வு குறித்த அம்சங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்,
- நீட்தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.
- கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது
- கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது
- நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது
- சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.