ரிசர்வ் வங்கியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 950 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கியில் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுமார் 950 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். பெரும்பாலும் அரசு பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து வங்கிதுறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.
மாநிலம் முழுவதும் பிப்.20ம் தேதி அரசு பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கியில் 950 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், மேலும் அதில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருப்பது கட்டாயம். மற்றும் கணினியில் வேலை செய்வதற்கான அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். வயது 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. விண்ணப்பதாரர்கள் rbi.org.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
மார்ச் 8 விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர் ரூ. 450 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 மட்டுமே. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை அறியலாம்.