மாநிலம் முழுவதும் பிப்.20ம் தேதி அரசு பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
பஞ்சாப் மாநிலத்தில் வருகிற 20ம் தேதி 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு அனைத்து மக்களும் வாக்களிக்கும் வகையில் 20ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அரசு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் இதனை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
தற்போது இந்தியா முழுவதும் தொற்று பரவல் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் தற்போது தேர்தல் நடைபெறாமல் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குறிப்பாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. கோவா மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு வேலை கிடையாது – உத்தரவு பிறப்பிப்பு!
இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் வருகிற 20ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் பிப்ரவரி 20ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 20ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பல்வேறு வர்த்தக தனியார் நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்காக செயல்படும் என்பதால் அன்று பொது விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14, தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது