NEET தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை – நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் சில மாநிலங்களில் கனமழை, வெள்ளம் போன்றவற்றால் மாணவர்கள் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வு
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக நீட் தேர்வு நடத்தவில்லை. இதனையடுத்து, கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததுமே மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகவே நீட் தேர்வு எழுத பல மாணவர்கள் தயாராக இருந்தனர். இதனிடையே, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
ஆரம்பத்தில், நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு எதுவும் கிடையாது என்பதால் பலரும் இந்தாண்டு நீட் தேர்வை எழுதவுள்ளனர். நீட் தேர்வில் மொத்தமாக 180 கேள்விகள் இடம்பெறும். அதாவது, விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் இருந்து ஒவ்வொரு பாடத்திலும் 50 கேள்விகள் இடம்பெறும். இவற்றில் 45 கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்கள் நன்றாக பயிற்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!
இந்த சமயத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை, வெள்ளம் போன்றவற்றால் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதாவது, கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, மராட்டியம் மாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் சில மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியாமல் போவதற்கு மொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.