தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி? அரசிற்கு கோரிக்கை!
தமிழகத்தில் நாளை (ஜூன் 14) முதல் புதிய தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.
வழிபாட்டு தலங்கள்:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் முழுவதுமாக கட்டுக்குள் வராத காரணத்தினால் அரசு தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு குறைந்த தளர்வுகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறைந்து வரும் மாவட்டங்களுக்கு பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி நாளை முதல் டாஸ்மாக், டீ கடைகள் போன்றவை 27 மாவட்டங்களில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களுக்கு தடை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.டி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழக தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூல் – அமைச்சர் விளக்கம்!
தற்போது நிலவும் பெருந்தொற்று காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடைக்கும் மக்களுக்கு இறை வழிபாடு மன அமைதியை கொடுக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலங்களை கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் தமிழக அரசு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக்கை விட ஆலயங்கள் ஆபத்தானவையாக தெரிகிறது இந்த அரசுக்கு