தமிழக தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூல் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் கல்விக்கட்டணம் வசூல் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்தும் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கல்விக்கட்டணம் வசூல்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜூன் 14 முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜூன் 14 முதல் பள்ளிகளுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஜூன் 21க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? பொதுமக்களின் எதிர்பார்ப்பு இதுதான்!
இந்நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கரூரில் ஆய்வு மேற்கொண்டார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 75 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் வசூலிக்கவும், அதில் முதல் தவணையாக 30 சதவீதம் மற்றும் 2ஆது தவணையாக 45 சதவீதமாக செலுத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த வழிமுறையை பின்பற்றியே தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிலும் கட்டணம் வசூலிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் பள்ளிகளை திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளோம். கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டு பள்ளிகள் திறப்பது எப்போது என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை பொறுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.