தமிழக அரசு மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு? முதல்வரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அயராது போராடி வரும் மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவர்கள்:
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவர்களே. இவர்கள் தங்கள் உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் நலனுக்காக அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினத்தில் தமிழக அரசு மருத்துவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – சிக்னலை மீறினால் அபராதம்!
இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை அவர்கள் கூறியதாவது, பல மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறோம். இந்திய அளவில் சுகாதாரத்துறையில் முன்னணியில் உள்ள தமிழகத்தில், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் அரசு மருத்துவர்கள் ஊதியம் குறைவாகவே உள்ளது. சம்பளத்தை உயர்த்துவதால் அரசுக்கு ஏற்படும் ரூ.300 கோடியை முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் இழப்புக்கு மேலான வருவாயை ஈட்டி தர தயாராக உள்ளோம்.
TN Job “FB Group” Join Now
எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மருத்துவர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். மருத்துவர் தினமான இன்று (ஜூலை 1) எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2009ல் வெளியிட்ட அரசாணை எண் 354 ன் படி சம்பள உயர்வு வழங்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் இது கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பரிசாக அமையும் என்றும் சட்ட போராட்ட குழு தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.