சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – சிக்னலை மீறினால் அபராதம்!
சென்னை மாவட்டத்தில் சிக்னலை மீறி செல்லும் வாகன ஓட்டிகளின் கைபேசிக்கு தானாக அபராதத் தொகைக்கான குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகை:
சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் சாலை விதிகளை பின்பற்றி செல்ல வேண்டும். சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை நம்மால் மேற்கொள்ள முடியும். சாலைகளில் செல்லும் போது நாம் சாலை குறியீடுகளை கவனிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசத்தை அணிய வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொள்வது அவசியம். வேகத்தடை உள்ள பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும். இவ்வாறு ஏராளமான சாலை விதிகள் உள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – அமைச்சர் அறிவிப்பு!!
இவற்றை கடைப்பிடிக்காதவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். சமீபத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் சிக்னலை மீறிச் செல்வோரின் கைபேசிக்கு அபராதத் தொகைக்கான குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படி தானியங்கி புரோகிராம் மூலம், செலான் அனுப்பும் திட்டம் முதல் முறையாக அண்ணா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சென்னையில் அண்ணா நகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம், சிக்னல்களில் சாலை விதிகளை மீறுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் அபராதத் தொகை கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிலால் இன்று தொடங்கி வைத்தார். வாகன எண்களை அடிப்படையாக வைத்து அபராதத்துக்கான செலான் அனுப்புவதில் இருந்த சிக்கல் இந்த புதிய திட்டம் மூலம் நீக்கப்பட்டுள்ளது.