தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சீருடைகள், ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் புதிய வடிவில் தரமாக தயாரிக்க தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழ்நாடு நூல் பதனிடும் ஆலை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை கிடங்கில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பல்கலையில் M.Phil பட்டப்படிப்பு துவக்கம் – உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்!
இந்நிலையில் இந்த கிடங்கை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள சீருடை துணிகள் தரமானதாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய சில மாதிரிகளை எடுத்து பரிசோதனை கூடத்திற்கு அமைச்சர் ஆர்.காந்தி அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு அறிவுரை கூறிய அமைச்சர் ஆர்.காந்தி, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழக்கப்பட்டு வருகிறது. அவை தரமான முறையில் வழங்கப்பட வேண்டும் எனவும், பொங்கலுக்கு புதிய தரத்தில், சிறந்த வடிவில் வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதற்காக தயாரிப்பு முறை குறித்து புதிய கட்டுப்பாடு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு முறை நூல் பதனிடும் போதும், துணிகள் உற்பத்தி செய்யப்படும் போது துணியின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள துணிகளின் தரத்தையும் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.