அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு தொகை – முழுமையாக வழங்க கோரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மருத்துவ காப்பீடு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மருத்துவ காப்பீடு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை பெறலாம். இந்த மருத்துவக் காப்பீட்டிற்காக அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்டத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சையின் போது இந்த அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு மூலம் மொத்த தொகையில் பாதி தொகை மட்டும் செலுத்த வேண்டும் மீதத்தொகை மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் மருத்துவ காப்பீடு கட்டணம் 180 ரூபாயில் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் புதிய நிறுவனங்களுக்கும் காப்பீடு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ந்து கூடுதல் சிகிக்சை முறைகளும் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை 10 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல இடர்பாடுகள் இருப்பதாக ஊழியர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர். தற்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு தொகையை வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய ‘தல’ தோனி? ஷாக்கான ரசிகர்கள்! அதிகாரி விளக்கம்!
அதனை தொடர்ந்து தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் காப்பீட்டு நிறுவனம் மருத்துவத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை முழுமையாக மருத்துவத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும் ஊழியர்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.