தமிழகத்தில் PSTM சான்று பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் PSTM சான்று பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் PSTM சான்று பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் PSTM சான்று பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களை தமிழ்வழி சான்று வழங்க வேண்டும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதனால் இதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்வழி சான்று

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு 16 கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 859 பேர் எழுதினார்கள். இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வில் விண்ணப்பித்த தமிழ்வழி சான்றுதலுக்கு மாற்றாக புதிய விதிமுறைகளின்படி தமிழ்வழி சான்றிதழ் பெற வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அத்துடன் இதற்கு ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளதாவது, முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தற்போது சான்றுகள் சரிபார்ப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 102 யூடியூப் சேனல்கள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே வழங்கியுள்ள தமிழ்வழி சான்றிதழை ஏற்க முடியாது எனவும் இதற்காக புதிய மாதிரி படிவத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் சான்றிதழை பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் விண்ணப்பதாரர்கள் பல்கலையில் ரூ.800 கட்டணம் செலுத்தி தமிழ்வழி சான்றிதழை இணைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்வழி சான்றிதழை பதிவேற்றம் செய்ய 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!