உதவியாளர் 600 காலிப்பணியிடங்கள் – புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை!
புதுச்சேரியில் உள்ள அமைச்சகத்தில் உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக நிரப்ப வேண்டும் என புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்து இருக்கிறது.
பதவி உயர்வு:
புதுச்சேரியில் அமைச்சக உதவியாளர்களுக்கான பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்ப வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் உதவியாளர் பணியிடங்களுக்கான நியமன விதி மாற்றப்பட்டது. அதன் படி 20 சதவீதம் நேரடி நியமனம் மற்றும் 20 சதவீதம் போட்டித் தேர்வு மூலம் நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
நோய்த்தொற்று எதிரொலி – இந்தியாவில் மருந்துகள் விற்பனை அதிகரிப்பு!
மேலும் நேரடி நியமனம் செய்ய அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படும் எனவும், அதற்கான ஷரத்தும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சக உதவியாளர் பணி குரூப் பி பதவி, அதனால் , மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கிடையாது. அதனால் சமூக நீதி பாதிக்கப்படும் எனவும், அகில இந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்படுவதால் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் போட்டித் தேர்வுக்கான ஷரத்துகளை ரத்து செய்து காலியாக உள்ள 600 உதவியாளர் பணியிடங்களை தற்போது மேல்நிலை எழுத்தராக பணியாற்றுபவருக்கு பதவி உயர்வு வழங்கி 100 சதவீகிதம் நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்நிலை எழுத்தர் பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மூலம் நிரப்பலாம் என்பதால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். இது குறித்து அமைச்சரவை நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.