தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து ஆன்லைன் முன்பதிவு – காவல்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை மக்கள் ஆன்லைனில் வாங்க இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு தகுந்த மருந்துகள் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிறகு மருத்துவ குழுக்கள் ஆலோசித்து ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொரோனா சிகிச்சையில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பரவல் அதிகரிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் கட்டுப்பாடு நிலவியது.
முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
நோயாளிகளின் உறவினர்களுக்கு நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து இந்த மருந்தை வாங்கி சென்றனர். அரசு இந்த நிலைமையை கருத்திற் கொண்டு உற்பத்தி மற்றும் கொள்முதலை அதிகப்படுத்தியது. தனியார் மருத்துவமனைகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ரெம்டெசிவிர் மருந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்திருந்தது. ஆன்லைன் மூலமும் போலியான வலைத்தளங்களிலும் பணம் செலுத்தி ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
TN Job “FB Group” Join Now
ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணங்கள் மூலம் வாங்கி பதுக்கியதாகவும், அதிக விலைக்கு விற்றதாகவும் 34 பேர் கைது செய்யப்பட்டனர். ரெம்டெசிவிர் தவிர வேறு சில மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் விற்பனை குறித்தும் இணையதளம் மூலம் மோசடிகள் நடப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்கள் அதிகரிக்கின்றன. பொதுமக்கள் ஆன்லைனிலோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமோ வாங்க முயல வேண்டாம் என்று சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. ஏமாந்தவர்கள் சைபர் குற்றப்பிரிவு 24 மணி நேரத்துக்குள் புகார் தெரிவித்தால் இழந்த பணத்தை மீட்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.