கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்து தவிர்ப்பு – IMC அறிவிப்பு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கும் போது ரெம்டெசிவிர் மருந்துகளை உபயோகிக்க கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் (IMC) அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா சிகிச்சை
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தொற்று விகிதம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதாவது கடந்த ஆண்டு முதல் உலகமெங்கிலும் பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான மருந்துகளும், தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தற்போது பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா 2 ஆம் அலையின் போது, நோய்த்தடுப்பு நடவடிக்கையில் சில மருந்துகளும், தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளது. அதன்படி கொரோனா சிகிச்சையின் போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளும், ரெம்டெசிவிர் உள்ளிட்ட சில மருந்துகளும் பயன்படுத்தப்பட்டது.
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – வித்தியாசமான Font மாற்றம் செய்தல்!
இந்த ரெம்டெசிவிர் மருந்தானது அதிக வீரியம் உடையதாக கருதப்படுவதால், அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் (IMC) அறிவுறுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால், நோய் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவுறுத்தலின் படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு லேசான அறிகுறி தென்பட்டால், அவர்களை வீடுகளில் இருந்தபடியே கவனித்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
தவிர தீவிர பாதிப்புடைய குழந்தைகளை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அதே போல பாதிப்பு தன்மையை கண்டறிய சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள கூடாது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டுள்ள 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளின் தொற்று பாதிப்பு அடிப்படையில் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மேலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.