ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களா நீங்கள்? வெளியான சூப்பர் அறிவிப்பு!!
தற்போது ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளவர்கள் மட்டுமே UTS App மூலமாக முன்பதிவு செய்ய முடியும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. தற்போது இந்த விதிமுறையை மாற்றி சூப்பரான அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு
இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். அதனால் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதியை ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது IRCTC App மூலமாகவும் UTS App மூலமாகவும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிகிறது. ஆனால் இதில் UTS App மூலமாக ரயில் நிலையத்தை விட்டு 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்கள் மட்டுமே UTS App வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு புதிய உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
இந்த தூர தொலைவை குறைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரயில்வே துறையானது, தற்போது UTS App மூலமாக 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்களும் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.