தமிழகத்தில் மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு புதிய உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி, எம்எஸ், படிப்புக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் முதுகலை படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி, எம்எஸ், படிப்புக்கு 1,162 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 763 இடங்களும் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் அதில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் சில முறைகேடுகளில் ஈடுபடுவதால் ஒரு சிலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அதனை எதிர்த்து கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தமிழக கவுரவ ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு? – அமைச்சர் விளக்கம்!
Follow our Instagram for more Latest Updates
இந்த வழக்கு குறித்த நீதிமன்ற உத்தரவில் மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவரிடமும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.