ரிலையன்ஸ் நிறுவனத்தின் சூப்பர் அப்டேட் – 50 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவை!
நாடு முழுவதும் அக். 1 ஆம் தேதி 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிலையில் 50 நகரங்களுக்கு ஜியோ ட்ரூ 5ஜி சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
5ஜி சேவை:
6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவை பிரதமர் மோடி தலைமையில் கடந்த அக். 1 ஆம் தேதி முதல் துவக்கப்பட்டது. நாட்டின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் இந்த 5ஜி இணைய சேவையை ஏலம் எடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் ட்ரூ 5ஜி சேவையை மேலும் 50 நகரங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. அதன் படி ஜியோ ட்ரூ 5ஜி சேவை 184 நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை – காலதாமதத்தின் காரணம் இது தான்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த நிறுவனம் 50 நகரங்களில் இன்று (ஜன 24) தனது உண்மையான 5ஜி சேவைகளை மிகப்பெரிய அளவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தற்போது வரை 184 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்களுக்கு 5ஜி சேவை கிடைத்து வருகிறது. மேலும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்த அந்தந்த மாநில நிர்வாகம் அனுமதி வழங்கி இருப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.