பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை – காலதாமதத்தின் காரணம் இது தான்!

0
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை - காலதாமதத்தின் காரணம் இது தான்!
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை - காலதாமதத்தின் காரணம் இது தான்!
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை – காலதாமதத்தின் காரணம் இது தான்!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

தனியார்மயமாதல்:

இந்தியாவில் மொத்தம் 28 பொதுத்துறை வங்கிகள் தற்போது 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த முறையால் நாட்டில் உள்ள வங்கி துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மத்திய அரசின் வங்கிகள் தனியார்மயமாக்கும் முறைக்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு தினத்தையோட்டி ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு – கோவை மாவட்ட நிர்வாகம் அதிரடி!

விரைவில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பொதுத்துறை வங்கி தனியார்மயமாக்கல் குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இதற்கு 2024 மக்களவை தேர்தல், முதலீட்டு இலக்கு போன்றவைகள் பெரும் காரணங்களாக கூறப்படுகிறது. தற்போது பொதுத்துறை வங்கிகளின் மோசமான செயல்பாடு காரணமாகவே அரசு தனியார்மயமாக்கல் திடத்தை செயல்படுத்துகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போது நாட்டின் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத காரணத்தாலும் வங்கிகள் தனியார் மயமாதல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!