தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அலகுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ள புதிய கல்வியாண்டில் பயின்று வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகளை நடத்த உள்ளதாக இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
அலகுத்தேர்வு
கொரோனா 2 ஆம் அலை காரணமாக இந்த ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக புதிய வகுப்புக்கான பாடங்கள் துவங்கியுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் நோக்கத்தோடு அவர்களுக்கான சிறப்பு தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசுப் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை சோதனை செய்யும் வகையில் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இம்மாணவர்களுக்கான அலகுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளுடன் சில செயல்முறைகளையும் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தேர்வு நடைபெறும் தேதிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் வழியாக அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பொறுத்தவரை, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்துக்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வழியாக நடத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசுத்துறையில் 2.50 காலிப்பணியிடங்கள், ஓய்வு வயது குறைப்பு – அடுத்த நடவடிக்கை என்ன?
இந்த பாடங்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சுருக்கமான முறையில் மாணவர்களுக்கு நடத்த வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைகளின் படி தேர்வு நடைபெற்று முடிந்தவுடன், விடைத்தாள்களை மதிப்பிட்டு, மதிப்பெண்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கான அலகுத் தேர்வு நடைபெற இருப்பதால், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு நேரில் வந்து மாணவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 4 வரையிலும், 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 2 வரையிலும் நடைபெறுகிறது.