IPPB ன் வீட்டு வங்கி சேவைகளுக்கு மீண்டும் கட்டணம் – ஆகஸ்ட் 1 முதல் அமல்!
இந்திய தபால் துறையின் முக்கிய அங்கமான போஸ்டல் பேமன்ட் பேங்க் (IPPB) வாடிக்கையாளர்களின் வீடு தேடி வரும் வங்கி சேவை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் கட்டண முறையை அமல்படுத்த வங்கி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சேவை கட்டணம்
இந்திய தபால் துறையை சேர்ந்த ஒரு சிறப்பு அங்கமான இந்தியன் போஸ்டல் பேமன்ட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி சென்று வழங்கும் சலுகைகளை அளித்து வருகிறது. அதாவது முதியவர்கள், ஊனமுற்ற வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு சென்று சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில், அவர்களுக்கு உதவும் வகையில், இவ்வகை வீட்டு சேவைகளை பல வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் IPPB வாடிக்கையாளர்களுக்கு புதிய கணக்கு துவங்குதல், பண பரிமாற்றம் மற்றும் சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்துதல் போன்ற பல சேவைகள் வீடுகளுக்கு சென்று கொடுக்கப்பட்டு வருகிறது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை – ஜூலை 12 வரை விண்ணப்ப பதிவு!
இந்த சேவைகள், கொரோனா பேரிடர் காலத்திலும் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று மேற்கொள்ளப்படும் வங்கி சேவைகளுக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்தியன் போஸ்டல் பேமன்ட் பேங்க், வீட்டு சேவைகளுக்கான கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் ஒவ்வொரு ‘டோர் ஸ்டெப் பேங்கிங்’ சேவைக்கும் ரூ.20 உடன் GST வசூலிக்கப்பட உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் புதிய கணக்கை திறப்பது, இருப்புத்தொகை அறிதல், மொபைல் ப்ரீபெய்டு, பில் செலுத்துதல், டெபிட் கார்டு போன்ற சேவைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு சேவைகளுக்கும் வசூலிக்கப்பட உள்ள புதிய கட்டண முறை குறித்த விவரங்களை www.ippbonline.com என்ற இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த புதிய கட்டணம் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.