தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு? வலுக்கும் கோரிக்கை!

தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து மீண்டும் 58 ஆக குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

ஓய்வு வயது குறைப்பு

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அதாவது, கொரோனா பேரலைத்தொற்று தாக்கத்திற்கு மத்தியில் அரசின் நிதி நிலைமை மோசமடைந்ததை கருத்தில் ஒண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணப்பலன்களை வழங்க முடியாததால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அரசு ஊழியர்கள் கூடுதலாக 2 ஆண்டுகள் வரை பணியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஓய்வு வயது நீட்டிப்பு அரசுத்துறையில் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை பாதித்தது.

Exams Daily Mobile App Download

இதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான நபர்களின் கனவுகள் தகர்ந்து போகக்கூடிய சூழல் நிலவியது. இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆட்சியில் அமர்ந்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக ஓய்வு பெறும் வயதை மேலும் உயர்த்த அரசு திட்டமிட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தகவல்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து கல்வியாளர் சதிஷ்குமார் கூறுகையில், ‘தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

இவர்களுக்கு, அரசு ஊழியர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு பெறும் குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது. கொரோனா காலங்களில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதை அனுமதித்தால் பணப்பலன்களை உடனடியாக வழங்க முடியாது என கருதி ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் ஓய்வு பெறும் வயது மீண்டும் உயர்த்தப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அரசு பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு 33 ஆண்டு காலம் அரசுப்பணியை நிறைவு செய்தவர்களுக்கு 58 வயது என்றும் நிறைவு செய்யாதவர்களுக்கு 60 வயது என்றும் ஓய்வு வயதை நிர்ணயித்து அரசாணை வெளியிட வேண்டும்’ என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!