இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!
இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் பெருகி வரும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், மே 23ம் தேதி முதல் சென்னையில் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வருபவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று போக்குவரத்து காவல்துறை அதிரடி உத்தரவை அறிவித்துள்ளது.
ஹெல்மெட் கட்டாயம்:
சென்னை மாநகரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதிவுகள் உள்ளது. இதனால் சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இரு சக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் அணிய அரசு அறிவுறுத்தியது.
Exams Daily Mobile App Download
ஆனால் அந்த அறிவிப்பை காவல் துறையினரும், பொதுமக்களும் இதுநாள் வரையிலும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 23ம் தேதியான வரும் திங்கட்கிழமை முதல் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருப்பவர் 2 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு மூலம் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – சூப்பர் வழிமுறைகள் இதோ!
மேலும் அரசின் கணக்கெடுப்பின் படி ஜனவரி 1, 2022 முதல் மே 15, 2022 வரை இரு சக்கர வாகனத்தில் பயணித்த 98 பேர் மரணமடைந்து உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 80 பேர் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாலும், 18 பேர் ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 841 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. போலீசாரின் உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.