தமிழகத்தில் 2 நாட்களில் மின் தொடர்பான குறைகள் நிவர்த்தி – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள மின் சேவை மையத்தில் மின்தடை தொடர்பாக புகார் அளித்த இரண்டு நாட்களுக்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.
மின்சேவை நுகர்வோர் மையம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு, அரசின் பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. புதிய திறமையான நிர்வாகிகளையும் நியமித்து வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சாரத் துறையிலும் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தேர்தலின் போது மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார். விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சமீபத்தில் உறுதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கணக்கீடு செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆளுநர் வெளியீடு!
அதற்கு பதிலாக மூன்று சலுகைகள் கொண்டு வரப்பட்டது. இதன் படி நடப்பாண்டின் மே மாத மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வெகு நாட்களாக மின் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளமையால் மாவட்டம் தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த மையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் 94987 94987 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மின் நுகர்வோர் மின்தடை குறித்து குறித்து புகார் அளிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு மாவட்டத்திற்கு 3 பேர் என மொத்தம் 138 பணியாளர்கள் மின் சேவை மையத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்த மையத்தில் புகார் அளித்த 2 நாட்களுக்குள் அந்த குறை நிவர்த்தி செய்யப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.