தமிழக அரசு அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆளுநர் வெளியீடு!
தமிழகத்தில் அரசு அலுவலர்களுக்கான புதிய காப்பீட்டு பயன்கள் உயர்த்தப்பட இருப்பதாக ஆளுநர் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
ஆளுநர் உரை:
தமிழக சட்டமன்ற பேரவையின் 16வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சட்டப்பேரவை முதல் உரையை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் பல புதிய திட்டங்களை பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் சமுக நீதியை பாதுகாக்கும் வகையில் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். . தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் கூடுதல் மாவட்டங்களில் பேருந்து சேவைகள்? அரசுக்கு கோரிக்கை!
கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க முன்னேற்பாடு நடவடிக்கைக்கு ரூ.50 கோடியும், திவர ஆக்சிஜன் வழங்கும் பணிக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறினார். மேலும், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலனை தமிழக அரசு தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், இவர்களின் காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்பட்டு அவை முறையாக செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ல் விதிகள் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும். இவர்களுக்கான பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் ஆதரவளிக்கும் திட்டங்களின் பயன்கள் சரியாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக அதிக களப்பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும், திருநங்கைகளின் வாழ்க்கையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தவும், அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.