அதீத கனமழை காரணமாக ‘ரெட்’ அலர்ட் – வானிலை மையம் முக்கிய தகவல்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதீத கனமழை:
இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கேரளாவில் கடந்த மே மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரள மாநிலம் மிகுந்த மழை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் கனமழை பெய்து பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மழை சற்று குறைய தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வாணையம் மூலமாக தொடர்பு அதிகாரி பணிக்கான தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்படுவதாக ரயில் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர். மும்பை, தானே, நவி மும்பை, உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் அலைகள் 10 அடிக்கு எழும்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 68 சென்டிமீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது . தற்போது பெய்து வரும் மழையின் அளவு ஜூலை மாதத்தை விட 27 விழுக்காடு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.