TNPSC தேர்வாணையம் மூலமாக தொடர்பு அதிகாரி பணிக்கான தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நேரடி நியமனம் மூலமாக பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இப்பணிக்கு தகுதியான நபர்கள் இனிமேல் TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலமாக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்காக தேர்வர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
TNPSC தேர்வு
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வரை உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிக்கான பணியிடம் நேரடி நியமனம் மூலமாக ஆட்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அதாவது எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பதவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இப்பதவியில் நியமனம் செய்ய அதிக கால தாமதம் ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் இனிமேல் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கும் TNPSC தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு TNPSC நடத்தும் தேர்வு மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை ரிப்போர்ட்!
மேலும் இப்பணிக்கு தேர்வர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி இதழியல், மாஸ் கம்யூனிகேசன், விசுவல் கம்யூனிகேசன், மக்கள் தகவல் தொடர்பு, விளம்பரம்,மல்டி மீடியா, மீடியா சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் மக்கள் தொடர்பு அலுவலராக 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பிஜி டிப்ளமோ இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படித்திருக்க வேண்டும். அத்துடன் கம்ப்யூட்டரில் தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவிப்பு இப்படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்கு காத்திருக்கும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.