‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி விலகியதற்கான உண்மையான காரணம் – ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி கடந்த மாதம் திடீரென்று சீரியலில் இருந்து விலகியது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து பரவி வருகிறது. அதனை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
ரோஷினி விலகல்:
பாரதி கண்ணம்மா தொடர் விஜய் டிவியில் இரவு நேர பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரையிலேயே டாப் ரேட்டிங்கில் செல்லும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் அனைவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் உள்ளது. அதிலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி புகழின் உச்சிக்கே சென்று விட்டார் என்றே கூறலாம். மாடல் துறையில் கலக்கி வந்த ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்து விட்டார். ஆனால் திடீரென்று ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மீண்டும் வரும் வெண்பா பரினா – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தனக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும், அதனால் தான் தொடரில் இருந்து விலகுவதாகவும் ரோஷினி அறிவித்திருந்தார். கன்னம்வைன் ரசிகர்கள் அனைவரும் வேறு ஒருவரை கண்ணம்மாவாக பார்க்க முடியாது என்றும், கண்ணமாவை மாற்ற கூடாது என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்கள் உள்ளதாக ரோஷினி அறிவித்தார். இதனால் அவரை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் ஒரு அளவிற்கு சமாதானம் ஆனார்கள். ரோஷினிக்கு அடுத்தபடியாக வினுஷா என்ற மாடல் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். முதலில் கதைக்கு ஒட்டாமல் இவர் இருப்பதாக பல கருத்துக்கள் வந்தது.
‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள்!
ஆனால் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு பொருந்தி விட்டார் என்று ஒரு பக்கம் பாராட்டுகளை பெற்று வருகிறார் வினுஷா. தற்போது பாரதியும், கண்ணம்மாவையும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு இடையில் அதிக அளவில் நெருக்கமான காட்சிகள் அடிக்கடி தொடரில் வருகின்றது. ரோஷினி விலகலுக்கான காரணத்தை தேடி வந்த ரசிகர்கள் தற்போது இந்த நெருக்கமான காட்சிகள் காரணமாக தான் ரோஷினி தொடரில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த காரணத்தை அறிந்த ரசிகர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.