இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் மறுதேர்வு – தனியார் கல்லூரிகள்!!
பொறியியல் மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கும் மீண்டும் தேர்வு எழுதும் படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
பொறியியல் மறுதேர்வு:
கொரோனா பரவல் காரணமாக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. கடந்த வருடம் முதல் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடை பெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகமும் செமஸ்டர் தேர்வுகளை தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. இந்த தேர்வில் ஆன்லைனில் மாணவர்களின் முகம் மற்றும் கண் அசைவுகள், அப்போது கேட்கும் ஒலி ஆகியவை பதிவாகும் வகையில், சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. இதில் பல மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.
TN Job “FB Group” Join Now
அதனால், 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலும் சில இணைப்பு கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்தாததால், அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியாகவில்லை. நிறைய குழப்பங்கள் நிலவியதால் தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.இதன் படி அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாலோசித்து வரும் ஜூன் மாதம் 14ம் தேதி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
பேஸ்புக் (Facebook) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
இந்த நிலையில் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கும் மீண்டும் தேர்வு எழுதும் படி சில கல்லூரிகள் மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். கல்லூரிகள் தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்தி காட்டுவதற்காக மீண்டும் தேர்வு எழுத சொல்கிறார்கள் என குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, உயர் கல்வித்துறை சார்பில், கல்லூரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மறு தேர்வுக்கு கட்டாயப்படுத்தும் கல்லூரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.