இந்தியாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்!

0
இந்தியாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்!
இந்தியாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்!
இந்தியாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்!

இந்தியாவில் கொரோனா பரவல் 5 விழுக்காட்டிற்கும் கீழ் உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க திட்டமிட வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலோரியா தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாத கனியாகவே உள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமெடுப்பதால் புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் பள்ளிகள் திறப்பு கேள்விக் குறியாக உள்ளது. அதனால் மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவலை நிலவுகிறது. ஆன்லைன் கல்வி எந்த அளவில் கற்றலை உறுதிப்படுத்தும் என்பது புதிராகவே உள்ளது.

ஆகஸ்ட் மாதம் சிவில் சர்விஸ் தேர்வுகள் – ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

ஆன்லைன் கல்வி வகுப்பறை கற்றலுக்கு ஈடாகாது. மாணவர்கள் வகுப்பறையில் கல்வியை மட்டும் கற்பதில்லை. ஒவ்வொருவரும் தனது தனித்திறமைகளை அறிகின்றனர். பல தரப்பட்ட மாணவர்களுடன் இணையும் பண்பை பெறுகின்றனர். எனவே வகுப்பறை சிறந்த கற்றல் தளமாக உள்ளது. தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் குறைந்து வருகிறது. அதனால் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாநிலங்களும் திட்டமிட்டு வருகிறது. படிப்படியாக வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை கலந்தாலோசித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சமும் நிலவுகிறது.

TN Job “FB  Group” Join Now

பள்ளிகளை திறக்கும் நேரம் வந்து விட்டது. இந்தியாவில் கொரோனா பரவல் 5 விழுக்காட்டிற்கும் கீழ் உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க திட்டமிட வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலோரியா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றலை குழந்தைகள் பெற்றுள்ளனர். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பள்ளிப்படிப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். அதனால் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். மேலும் செப்டம்பர் மாதங்களில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் நம்பிக்கை அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!