வங்கிகளில் கடன் வாங்கும் போது கடன் தொகை மற்றும் வட்டி தொகையோடு மட்டுமல்லாமல் பிராசசிங் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மறைமுக கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
ரிசர்வ் வங்கி :
பல காலமாக கடன் வாங்கும் போது வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்கள் குறித்து முன்கூட்டியே வாடிக்கையாளர்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. தற்போது இதற்கான முக்கிய நடவடிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது கடன் பெற விண்ணப்பம் செய்பவரிடம் கடன் தொகை, அதற்கான வட்டி கடன், செலுத்துவதற்கான காலம், ஆகியவற்றோடு கடனுக்காக வசூலிக்கப்படும் பிரசாந்த் கட்டணம், ஆவண கட்டணம் உள்ளிட்ட அனைத்து மறைமுக கட்டணங்களையும் வெளிப்படையாக முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த வெளிப்படை தன்மையை கொண்டு வர ரிசர்வ் வங்கி தற்போது புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நெல்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 239 காலியிடங்கள் – டிப்ளமோ / ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அதன்படி ஒவ்வொரு கடனுக்கும் வழங்கப்படக்கூடிய கீ ஃபேக்ட் ஸ்டேட்மென்ட் எனப்படும் விவர அறிக்கையில் கடனுக்கான அனைத்து கட்டண விவரங்களும் வெளியிட வேண்டும் என ஆர்பியை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வங்கிகளுக்கு மட்டுமல்லாமல் நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கக்கூடிய செயலிகள் ஆகியவற்றிற்கும் பொருந்தும். இதன் மூலம் கடன் வாங்குபவர்கள் வங்கிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்பது பற்றிய விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும், இந்த விவர அறிக்கையில் கட்டணங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் கடனை பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.