நீங்கள் வங்கி லாக்கர் வசதியை பயன்படுத்துபவரா? உங்களுக்கான முக்கிய அப்டேட்!! RBI வெளியீடு!
வங்கிகள் தங்களிடம் லாக்கர் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அத்துடன் ரிசர்வ் வங்கி ஆனது வங்கி லாக்கர் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
லாக்கர்
ரிசர்வ் வங்கி தற்போது வங்கி லாக்கர்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கிகள் தங்களிடம் லாக்கர் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் கடந்த ஜனவரி 1ம் தேதி அன்றே ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை என ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
நகை வாங்க சூப்பர் சான்ஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!
தற்போது லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஒப்பந்தம் குறித்து தெளிவாக தெரியாது என்பதாலும் மற்றும் வங்கிகள் இது தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை என்பதாலும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழிகாட்டுதலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் வங்கிகள் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்தம் குறித்து வருகிற ஏப்ரல் 30க்குள் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் 50% வாடிக்கையாளர்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், இதே போல் 75% பேர் வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீதமுள்ள வாடிக்கையளர்களுக்கு ஸ்டாம்ப் பேப்பர் வழங்குதல், மின்னணு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் ஒப்பந்தங்களின் நகல்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.