ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்வு – RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்:
இந்தியாவில் நிலவும் பண வீக்கத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டுதோறும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி விகிதம் என்பது குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ஆகும். நடப்பு ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது. இதனால் மொத்த வட்டி ரெப்போ விகிதம் 4.40% ஆக அதிகரித்தது.
Follow our Instagram for more Latest Updates
பிறகு ஜூன் மாதம் ரெப்போ வட்டி 4.90 சதவீதமாகவும், ஆகஸ்டில் 5.40 சதவீதமாகவும் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தியது. இதனால் வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % ஆக உயர்ந்தது. இதனால் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் உயர்ந்தது.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வரும் நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களின் மாதாந்திர தவணைத் தொகை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.