இனி ‘இந்த’ வங்கியில் பணம் எடுக்க தடை – ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!
மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல வங்கிக்கு ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி 10,000 ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி:
நாட்டின் வங்கி மற்றும் நிதி அமைப்பு செயல்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. நாட்டின் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வங்கிகள் விதிமுறைச் சட்டங்களை மீறினால் ரிசர்வ் சட்ட நீதியான நடவடிக்கைகளை எடுக்கிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வந்த நாகர் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
கண்ணனை அடித்தவர்களை, அடித்து நொறுக்கும் கதிர் – விறுவிறுப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!!
இந்த வங்கி நெருக்கடியான சூழலில் இயங்கி வந்ததால் வங்கி விதிமுறைச் சட்டம் 1949-ன் கீழ் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனி 10,000 ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. இத்தடையானது டிசம்பர் 6ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலம் வரை நீடிக்கும். அடுத்த கட்டுப்பாடாக இந்த வங்கியில் இனி பணம் போடவும், வங்கி கடன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஒரே தவணையில் பொருட்கள்!!ஆரவாரத்தில் மக்கள்!!
அதனால் நாகர் அர்பன் கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் இந்த வங்கி இனி யாருக்கும் கடன் கொடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், முதலீடு செய்யவும் முடியாது. ஆனால் வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படும். அதானல் வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்கள் பயப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.